அரிசி ஏற்றுமதியை 44% குறைக்கவுள்ள வியட்னாம்

ஹனோய்: ஆண்டுதோறும் தான் ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவை 44 விழுக்காடு குறைக்கவிருப்பதாக வியட்னாம் அறிவித்துள்ளது.

ஓர் ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசியின் அளவை நான்கு மில்லியன் டன்னுக்குக் குறைப்பது வியட்னாமின் இலக்கு.

2030ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைய அந்நாடு எண்ணம் கொண்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

இந்தியா, தாய்லாந்து ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் வியட்னாம் இருக்கிறது.

ஆண்டுதோறும் 80,000லிருந்து 90,000 டன் அளவு அரிசி வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இறக்குமதியாகும் அரிசியின் மதிப்பு கிட்டத்தட்ட 80 மில்லியன் வெள்ளி.

சிங்கப்பூரில் விற்கப்படும் அரிசியில் 20 விழுக்காடு வியட்னாமிலிருந்து இறக்குமதியாகிறது.

உள்நாட்டு உணவு விநியோகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக வியட்னாம் அரசாங்கத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று வெளியான அந்த ஆவணத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கண்டிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!