பியோங்யாங்: வடகொரியாவில் ஓர் இரண்டு வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையின் பெற்றோரிடம் பைபிள் இருந்ததற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட விவரங்களின்படி வடகொரியாவில் பைபிள் நூலை வைத்திருக்கும் கிறிஸ்துவர்களுக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம்.
வடகொரியாவில் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது, சமயம் சார்ந்த பொருள்களை வைத்திருப்பது உள்ளிட்டவை கடும் தண்டனையை வாங்கித் தரக்கூடியவை என்று அந்நாட்டில் உள்ள 'கொரியா ஃபியூச்சர்' எனும் லாப நோக்கில்லா அமைப்பு தெரிவித்தது.

