ஒரே வீடு, அதே திருடர்கள்; மூன்று வாரத்தில் 3 முறை திருட்டு

ஒரே வீடு, அதே திருடர்கள்; மூன்று வாரத்தில் 3 முறை திருட்டு

1 mins read
df80f785-d947-454f-82a3-ca51e88cfb3c
-

ஈப்போ: மலே­சி­யா­வின் ஈப்போ நக­ரில் ஒரே வீட்­டில் மூன்று வார இடை­வெ­ளி­யில் மூன்று முறை கொள்ளை சம்­ப­வம் அரங்­கே­றி­யுள்­ளது அப்­ப­கு­தி­யி­னரை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

அந்த வீட்­டில் 71 வயது சானும் அவ­ரது 80 வயது கண­வ­ரும் வசித்து வரு­கின்­ற­னர். மே 2, மே 11, மே 24 ஆகிய தேதி­களில் நடந்த மூன்று கொள்­ளைச் சம்­ப­வங்­களில் சுமார் 26,000 ரிங்­கிட் மதிப்­புள்ள பொருள்­கள் திருடு போய்­விட்­ட­தாக சான் சொன்­னார். கொள்­ளைச் சம்­ப­வங்­க­ளின்­போது தனிப்­பட்ட ஆவ­ணங்­கள் உள்­ளிட்ட மற்ற பொருள்­களும் பறி­போ­ன­தாக அவர் சொன்­னார்.

"முதல் முறை வந்த திரு­டர்­கள்­தான் இரண்­டா­வது முறை­யும் வந்­தார்­கள் என்று நம்­பு­கிறேன்.

"இரண்­டா­வது முறை நான் கூச்­ச­லிட்­ட­தால் அவர்­கள் தப்­பி­யோ­டி­விட்­ட­னர். காவல்­து­றை­யி­னர் வரும்வரை அறை­யை­விட்டு வெளியே வர­வில்லை."

"மூன்­றா­வது முறையும் வந்த திரு­டர்­கள் எங்­கள் அறை­ கதவை உடைத்து உள்ளே புகுந்து­விட்­ட­னர். முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்த அந்த இரு­வ­ரில் ஒரு­வன் கத்­தியை காட்டி அமை­தி­யாக இருக்­கும்­படி மிரட்­டி­னான். அவர்­கள் என்னை கீழே தள்­ளி­ய­தில் என்­னு­டைய வலுது கால் முறிந்­து­விட்­டது," என்று சான் சொன்­னார்.

காவல்­து­றை­யி­னர் அப்­ப­கு­தி­யில் சுற்­றுக்­கா­வல் பணியை பலப்­ப­டுத்­து­வார்­கள் என்று நம்­பு­வ­தாக சொன்­னார். இருப்­பி­னும் மக்­கள் தங்­கள் வீடு­க­ளின் பாது­காப்பை உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் சொன்­னார்.