ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா நியூகினியின் பிரிவினைவாதிகள், தங்களின் பிடியில் உள்ள நியூசிலாந்து விமானியைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இன்னும் இரண்டு மாதத்திற்குள் சுதந்திரமளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என்றால், சென்ற பிப்ரவரி மாதத்தில் இருந்து தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள பிலிப் மெஹ்டென்ஸைக் கொன்றுவிடுவோம் என்று வெள்ளிக்கிழமையன்று வெளியான புதிய காணொளியில் பிரிவினைவாதிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.
காணொளியில் பேசிய பிணைக் கைதி பிலிப், "பாப்புவா சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்தோனீசியாவைத் தவிர மற்ற நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று பிரிவினைவாதிகள் விரும்புகின்றனர். இரண்டு மாத காலத்தில் இது நடைபெறவில்லை என்றால் என்னை கொன்று விடுவார்கள்," என்று பேசினார்.
காணொளியின் உண்மைத்தன்மையை இந்தோனீசிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதாக நியூசிலாந்து சொன்னது.

