தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறந்தவர் கைது

1 mins read
e22c643d-ab0c-4b6e-a438-d5aa21e4514b
-

சோல்: வானில் பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்­தின் அவ­ச­ர­கால கத­வைத் திறந்த 30 வயது மதிக்­கத்­தக்க ஆட­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

விமா­னத்­தில் சங்­க­ட­மாக இருந்­தது என்­றும் அதில் இருந்து உட­ன­டி­யாக வெளி­யேற வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் கதவை திறந்­த­தாக விசா­ர­ணை­யின்­போது அந்த ஆட­வர் காவல்­து­றை­யி­ன­ரி­டம் கூறி­யுள்­ளார். தமது வேலை பறி­போ­ன­தால் தாம் மன அழுத்­தத்­தில் இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­யி­ருக்­கி­றார்.

தென்­கொ­ரி­யா­வைச் சேர்ந்த ஏ‌‌ஷி­யானா ஏர்­லைன்ஸ் விமா­னம் அந்­நாட்­டின் ஜெஜூ தீவில் இருந்து டேகு நக­ருக்கு 194 பய­ணி­க­ளு­டன் சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போது, திடீ­ரென்று பயணி ஒரு­வர் அவ­ச­ர­கால கதவைத் திறந்­து­விட்­டார்.

கதவு திறந்த நிலை­யில் விமா­னத்­துக்­குள் காற்று வேக­மாக வீச ஆரம்­பித்­தது. இத­னால், பய­ணி­கள் நிலை­த­டு­மாறி அச்­சத்­தில் உறைந்­த­னர். சிலர் மயக்­க­ம­டைந்து விழுந்­த­னர். சில­ருக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து உட­ன­டி­யாக விமா­னம் டேகு விமான நிலை­யத்­தில் பாது­காப்­பாக தரை­யி­றக்­கப்­பட்­டது.

''விமா­னம் தரை­யி­லி­ருந்து 213 மீட்­டர் உய­ரத்­தில் பறந்து கொண்­டி­ருந்­த­போது அவர் கதவைத் திறந்தார்.

"விமா­னச் சிப்­பந்­தி­க­ளால் கதவை மூட முடி­ய­வில்லை. நாங்­கள் நிச்­ச­யம் உயிர் பிழைக்க மாட்­டோம் என்று நினைத்­தோம்," என்று அதே விமா­னத்­தில் பய­ணம் செய்த ஒரு­வர் சொன்

­னார்.