ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஏழு எண்ணெய் நிறுவனங்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் (3.8 மில்லியன் வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியபோது, அதிகரித்து வந்த எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தோனீசிய அரசாங்கம் சில்லறை விற்பனை விலைக்கு வரம்பை நிர்ணயித்தது. அச்சமயத்தில் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியதாக கிட்டத்தட்ட 27 நிறுவனங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையை அடுத்து, முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுக்கு ஒரு பில்லியன் ரூப்பியா ($90,000 வெள்ளி) முதல் 40.9 பில்லியன் ரூப்பியா வரை அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

