பாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கி பழங்குடியினர் 11 பேர் உயிரிழப்பு

1 mins read
bb234f1d-a62c-47df-b072-b43fac5cddd8
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னின் வட­ப­கு­தி­யில் ஏற்­பட்ட பனிச்­ச­ரி­வில் சிக்கி குறைந்­தது 11 பேர் மாண்­டு­போ­யி­னர்; 25 பேர் காய­முற்­ற­னர்.

இறந்தவர்களில் நான்கு பெண்களும் நான்கு வயதுச் சிறுவனும் அடங்குவர்.

அவர்­கள் அனை­வ­ரும் பழங்­கு­டி­ நாடோ­டி­ இனத்தவர் எனக் கூறப்­பட்­டது.

கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் அவர்­கள் தங்­க­ளது ஆட்­டு­மந்­தை­க­ளு­டன் ஷோன்­டர் கண­வாய்ப் பகு­தியை கடந்­த­போது திடீ­ரென பனிச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது.

இச்­சம்­ப­வத்­தில் மாண்­டோ­ருக்­காக இரங்­கல் தெரி­வித்த பாகிஸ்­தான் பிர­த­மர் ஷெபாஸ் ஷரிஃப், பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக பனிச்­ச­ரிவு போன்ற சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

வெகு­தொ­லை­வில் இருப்­ப­தா­லும் கர­டு­மு­ர­டான மலைப்­ப­குதி என்­ப­தா­லும் அவ்­வி­டத்­தைச் சென்­ற­டைய மீட்­புக் குழுக்­கள் பெரி­தும் சிர­மப்­பட்­டன. மீட்­புப் பணி­யில் இரண்டு ராணுவ ஹெலி­காப்­டர்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.