மலேசியா தடுத்து வைத்துள்ள சீனக் கப்பலில் இரண்டாம் உலகப் போரைச் சேர்ந்த பொருள்கள்

மலேசியா தடுத்து வைத்துள்ள சீனக் கப்பலில் இரண்டாம் உலகப் போரைச் சேர்ந்த பொருள்கள்

1 mins read
2d639873-6dac-48f9-854f-87f4d4860aea
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வி­ன் அனு­ம­தி­யின்றி அத­னு­டைய கடற்­ப­கு­திக்­குள் நங்­கூ­ர­மிட்டு நிறுத்­தப்­பட்ட சீனா­வில் பதிவு பெற்ற கப்­பலை மலே­சிய அதி­கா­ரி­கள் தடுத்துவைத்­த­னர்.

அந்தக் கப்­ப­லில் இரண்­டாம் உல­கப் போரைச் சேர்ந்­தவை என்று நம்­பப்­படும் பீரங்­கிக் குண்டு­கள் காணப்­பட்டு இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் கூறினர்.

அமெ­ரிக்­கா­வின் ஹவா­யில் உள்ள பியர்ல் துறை­மு­கத்­தில் 1941ஆம் ஆண்டு ஜப்­பா­னிய விமா­னங்­கள் படு­ப­யங்­கர தாக்கு­தல்­களை நடத்­தின.

அதற்கு மூன்று நாள் கழித்து பிரிட்­ட­னைச் சேர்ந்த இரண்டு கப்­பல்­களை ஜப்­பா­னிய விமா­னங்­கள் மூழ்­க­டித்­து­விட்­டன.

பழைய பொருள்­க­ளைச் சேக­ரிப்­போர் அந்த இரண்டு கப்பல்­களைக் குறி­வைத்து இருக்­கிறார்­கள் என்று இந்த மாதம் தக­வல்­கள் வெளி­யாயின. இந்த நிலை­யில் அந்­தக் கப்­ப­லில் இருந்து குண்­டு­கள் கண்­டு­பிடிக்­கப்­பட்டு உள்­ளன.

சீனா­வின் ஃபூஷு நக­ரில் பதி­யப்­பட்ட ஒரு கப்­பல் 32 ஊழி­யர்­க­ளு­டன் மலே­சி­யா­வின் தெற்கு மாநி­ல­மான ஜோகூர் அருகே தன் கடல் எல்லைக்குள் அனு­மதி இல்­லா­மல் வந்­த­தாக மலே­சிய கடல்­துறை அம­லாக்க அமைப்பு தெரி­வித்­தது.

கப்­ப­லில் பழைய உலோ­கப் பொருள்­களும் பீரங்­கிக் குண்­டு­களும் இருந்­ததைக் கண்ட அதி­கா­ரி­கள் அவை 2ஆம் உல­கப் போரைச் சேர்ந்­த­தாக இருக்­க­லாம் என்று நம்­பு­கி­றார்­கள்.