கான்சூ: சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற தனது சொந்த விண்வெளி நிலையத்தை அண்மையில் கட்டி முடித்தது.
அந்த நிலையத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கும் வகையில் முதல்முறையாக விண்வெளி வீரர்களை அந்த நிலையத்திற்கு சீனா இன்று அனுப்புகிறது.
பெய்ஜிங்கில் செயல்படும் பெய்ஹாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூய் ஹாய்ச்சோ என்ற விண்வெளி வீரர்தான் சீனாவில் ஆகஅதிக அனுபவம் மிக்கவர்.
பழுத்த அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களான மேஜர் ஜெனரல் ஜிங் ஹாய்பிங், கர்னல் சூ யாங்சூ ஆகியோரும் அவருடன் செல்வர். இந்த மூவரும் முதன்முதலாக விண்வெளிக்குச் செல்கிறார்கள். அந்தக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் ஜிங் தலைமை வகிப்பார்.
மூன்று வீரர்களும் 'தெய்வீகக் கலம்' என்ற ஷெங்சூ-16 விண்கலத்தில் செல்வர்.
அந்தக் கலம் இன்று காலை 9.31 மணிக்கு வடமேற்கு சீனாவில் இருக்கும் ஜுயூசுவான் துணைக்கோள நிலையத்தில் இருந்து புறப்படும்.
அந்த விண்கலம், விண்வெளியில் சீனா அமைத்துள்ள நிலையத்துடன் சேரும். விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் அந்த விண்வெளி நிலையத்திற்குச் சென்று அதன் உள்ளே 180 நாள்கள் வசிப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

