தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருவாழ்வி மகரந்தக் கடத்தி

1 mins read
2ec0e998-9ab2-41b8-a30b-3dc24f696f00
-

பிரே­சி­லின் அட்­லாண்­டிக் காட்டுப் பகு­தி­யில் வாழ்­கின்ற மரத் தவ­ளை­கள் பற்றி அந்த நாட்டின் கேம்­பி­னாஸ் பல்­கலைக்­க­ழ­கத்தின் இரு­வாழ்­வி­ விலங்குகள் (நீர், நிலம் வாழும்) ஆய்­வுக்கூடத் தலைவர் டாக்டர் லூயிஸ் பிலிப் டோலி டோ­வும் அவ­ரின் குழு­வி­ன­ரும் 2020ல் ஆய்வு நடத்தி­னர்.

பழ மரத்­தில் பூக்­களில் இருக்­கும் திர­வத்­தைக் குடிக்­கச் செல்­லும் தவ­ளை­கள் (படம்: கார்­லஸ் ஹென்­ரிக் டி-ஒவி­வெரா- நோகூ­ரியா) பூக்­களில் இருக்­கக்­கூ­டிய மகரந்­தங்­க­ளைத் தோளில் சுமந்து அவற்றை வேறு பூக்­களில் சேர்த்து மக­ரந்­தச் சேர்க்­கைக்கு உத­வு­கின்­றன என்­ப­தை அவர்கள் கண்டு பிடித்­த­னர்.

அந்­தத் தவ­ளை­களே மக­ரந்­தக் கடத்­தி­க­ளா­கத் தெரிந்த முத­லா­வது இரு­வாழ்­வி­க­ளாக இருக்­கக்­கூ­டும் என்று ஆய்வு கூறு­கிறது.