தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1எம்டிபி வழக்கு: ஜோ லோ மக்காவில் இருப்பதாகத் தகவல்

1 mins read
84ff5f40-82b8-4f24-a430-b093b071b3fd
-

கோலா­லம்­பூர்: 1எம்­டிபி விவ­காரத்­தில் சதித் திட்­டத்­தைத் தீட்­டி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஜோ லோ, மக்­கா­வில் பதுங்கி இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது. மலே­சி­யா­வின் ஊழல் தடுப்­புப் பிரி­வான எம்­ஏ­சிசி இதை உறுதிப்­ப­டுத்­தியது.

ஜோ லோ உட்­பட 1எம்­டிபி வழக்­கில் தேடப்­ப­டு­வோர் மக்­கா­வில் இருக்­கின்­ற­னர் என்று நம்­பு­வ­தாக அல் ஜஸீரா ஊட­கத்­திற்கு அனுப்­பிய கடி­தத்­தில் எம்­ஏ­சிசி குறிப்­பிட்­டது.

ஜோ லோவை மீண்­டும் மலே­சி­யா­வுக்­குக் கொண்­டு­வர தமது அர­சாங்­கம் மற்ற நாடு­க­ளு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மும் சட்ட அமைச்­சர் செரி அஸா­லினா ஓத்­மா­னும் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­த­னர்.