ஜகார்த்தா: இந்தோனீசியா, 20 ஆண்டுகளாக நடப்பில் இருந்த மணல் ஏற்றுமதித் தடையை விலக்கியுள்ளது. இந்நடவடிக்கை அந்நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மணல் ஏற்றுமதியை இந்தோனீசியா 2003ஆம் ஆண்டு தடை செய்தது. 2007ஆம் ஆண்டில் தடையை மறுவுறுதிப்படுத்தியது.
தடை விலக்கப்படுவதை இந்தோனீசிய அதிகாரிகளும் சுரங்க நிறுவன உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
சிங்கப்பூரும் தடை விலக்கப்படுவதை வரவேற்றுள்ளது. 2003ஆம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர்தான் இந்தோனீசியாவிலிருந்து ஆக அதிக அளவில் மணலை இறக்குமதி செய்து வந்தது.

