ஜியூச்சுவான் (சீனா): தியாங்கோங் விண்வெளி நிலையத்துக்கு சீனா மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. பெய்ஹாங் பல்கலைக்கழகப் பேராசிரியரான குய் ஹாய்ச்சாவ் என்ற விஞ்ஞானியும் மூவரில் ஒருவர்.
முதன்முறையாக விஞ்ஞானியாகப் பணிபுரியும் பொதுமக்களில் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது சீனாவின் இலக்கு.
ராணுவத்தின் நிர்வாகத்தில் இருக்கும் விண்வெளித் துறைக்கு சீனா பல பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. இத்துறையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியடைவது அதன் நோக்கம்.
சீனாவின் ஷென்சுவோ-16 விண்வெளி வாகனம், லோங் மார்ச் உந்துகணையிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. வடமேற்கு சீனாவில் இருக்கும் ஜியுச்சுவான் துணைக்கோல் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.31 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஏஎஃப்பி செய்தி நிறுவனமும் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சியும் இக்காட்சி பதிவான காணொளிகளை வெளியிட்டன.
தியாங்கோங் விண்வெளி நிலையத்தை மையமாகக்கொண்டே சீன விண்வெளித்துறை இயங்குகிறது.

