ஜகார்த்தா: அதிநவீன அம்சங்களுடன் தனது புதிய தலைநகரான நுசாந்தாராவை உருவாக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது. அங்கு அறிவார்ந்த கட்டடங்கள், பறக்கும் வாகனங்கள் உட்பட பல மாபெரும் வசதிகளைச் செய்து தருவது அந்நாட்டின் இலக்கு.
எனினும், இப்படிப்பட்ட ஒரு நகரை உருவாக்குவது சாத்தியம்தானா என்ற கேள்வியும் நிலவி வருகிறது. நகரை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பதற்கான நாளும் நெருங்குகிறது.
நுசாந்தாரா நகரை எதிர்பார்த்தபடி அமைக்கப் போதுமான நிதி இல்லை என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, அதிநவீன அம்சங்களைச் சேர்க்க அவற்றுக்கான தொழில்நுட்ப முறைகளும் கிட்டத்தட்ட அறவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியன்று இந்தோனீசியா அதன் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
அடுத்த ஆண்டுதான் நுசாந்தாராவை அதிகரபூர்வமாகத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

