வாஷிங்டன்: அமெரிக்க, சீன தற்காப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு நடத்த அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கையை சீனா மறுத்துள்ளது.
தற்போது சீனாவின் தற்காப்பு அமைச்சராக இருக்கும் லி ஷாங்ஃபுமீது வாஷிங்டன் தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து சந்திப்புக்கு சீனா ஒப்புதல் வழங்கவில்லை. 2018ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் விலக்கப்படவேண்டும் என்பது சீனாவின் வாதம். சீனாவின் மறுப்பு, வெள்ளை மாளிகைக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினும் திரு லியும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. ஷங்ரிலா சந்திப்பு, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் முக்கியமான தற்காப்புச் சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவுடனான ராணுவத் தொடர்புகளை வலுப்படுத்த அமெரிக்கா முயற்சி எடுத்து வந்துள்ளது. சீனா அதிகம் ஒத்துழைக்கவில்லை.

