தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவில் பரபரப்பு

2 mins read
40887605-4b7e-4773-8e5a-7f1875d23e80
-

சோல்: வட­கொ­ரியா நேற்று பாய்ச்­சிய விண்­வெளி செயற்கைக்கோள் கட­லில் விழுந்­த­தாக அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கம் தெரி­வித்­தது. துணைக்­கோ­லைப் பாய்ச்­சப் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக­னத்­தின் பாகங்­களை மீட்­டுள்ளதாக தென்­கொ­ரிய ராணு­வம் கூறி­யது.

'சொல்­லிமா-1' என்று பெய­ரி­டப்­பட்ட வட­கொ­ரி­யா­வின் புதிய உந்­து­க­ணை­யின் எரி­சக்தி முறை­யும் எஞ்­சின் இயந்­தி­ர­மும் சீராக இயங்­க­வில்லை. அதுவே துணைக்­கோல் கடலில் விழுந்­த­தற்­குக் கார­ணம் என்று வட­கொ­ரி­யா­வின் கேசி­என்ஏ தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

ஆறா­வது முறை­யாக செயற்கைக்கோளைப் பாய்ச்­சும் முயற்­சி­யில் ஈடு­பட்­டது வட­கொ­ரியா. இதற்கு முன்பு கடை­சி­யாக 2016ஆம் ஆண்­டில்­ முயற்சி செய்­தது.

நேற்­றைய நிகழ்­வால் தென்கொ­ரி­யா­வி­லும் ஜப்­பா­னி­லும் சிறிது நேரத்­துக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. அவ்­விரு நாடு­க­ளின் சில பகு­தி­களில் மக்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­மா­றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

பின்­னர் எச்­ச­ரிக்­கை­கள் மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டன. எவ்­வித சேதமோ அபா­யமோ ஏற்­பட்­ட­தா­கத் தக­வல் இல்லை.

தென்­கொ­ரி­யத் தலை­ந­கர் சோலில் அபாய ஒலி அடித்தது, மக்­கள் தங்­க­ளின் கைப்­பே­சி­களில் எச்­ச­ரிக்­கைக் குறிப்புகளைப் பெற்­ற­னர். வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­மாறு வந்த எச்­ச­ரிக்கை சோல் நக­ரில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இது, அங்­குள்ள மக்­க­ளுக்கு அதி­கம் பரிச்­ச­யம் இல்­லாத சூழல்.

வட­கொ­ரியா, அதன் உந்­து­கணையை தென்­கொ­ரி­யாவை நோக்­கிப் பாய்ச்­சி­ய­தாக தென்­கொ­ரிய ராணு­வம் தெரி­வித்­தது, அத­னால்­தான் எச்­ச­ரிக்­கை­கள் விடுக்­க­வேண்­டிய நிலை உரு­வா­ன­தென அது குறிப்­பிட்­டது.

உள­ளூர் நேரப்­படி காலை 6.32 மணிக்கு சோலில் அபாய ஒலி அடித்தது. வீடு­க­ளை­விட்டு வெளி­யேற வேண்­டி­யி­ருக்­க­லாம் என்று பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கப்­பட்­ட­னர். சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு வெளி­யே­றுமாறு எச்­ச­ரிக்கை வந்­தி­ருக்­கிறது.

சுமார் 10 நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அது தவ­றான தக­வல் என்று நக­ரின் அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர்.

வடகொரியா பாய்ச்சிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது