'மோசமான பருவநிலையைக் கையாள தயார்நிலையில் உள்ளது சீனா'

1 mins read
cb7d3123-8bac-49fa-9c17-b744f3dce43c
-

ஷாங்­காய்: சீனா­வில் பொது­வாக ஜூன் மாதத்­தி­லி­ருந்­து­தான் வெயில் காலம் தொடங்­கும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்­திலி­ருந்தே அங்கு வெப்­ப­நிலை என்­றும் இல்­லாத அளவு அதி­க­மா­கப் பதி­வாகி வரு­கிறது.

சில மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் சீனா அனல் காற்­றுக்கு உள்­ளா­னது. அந்­நாட்­டில் மின்­சக்­தித் தட்­டுப்­பா­டும் ஏற்­பட்­டது.

இப்­போது மீண்­டும் மின்­சார விநி­யோ­கத்­தில் இடை­யூறு ஏற்­படும் நிலைமை எழுந்­துள்­ளது. எனி­னும், இப்­ப­டிப்­பட்ட சூழ­லைக் கையாள மற்ற நாடு­க­ளைக் காட்­டி­லும் சீனா கூடு­தல் தயார்நிலை­யில் இருக்­கிறது என்று ஓர் ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

லன்­டாவ் குழு­மம் நடத்­திய ஆய்­வில் இத்­த­க­வல் தெரி­விக்­கப்­பட்­டது. மின்சார விநியோகத்துக்கான மாற்று ஏற்பாடுகளை சீனா செய்திருப்பதாக குழுமத்தின் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

உல­க­ள­வில் வெப்­ப­நிலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. அத­னால் ஒரு­கா­லத்­தில் அவ்­வப்­போது நேர்ந்த பரு­வ­நிலை நிகழ்­வு­கள் இனி அடிக்­கடி நிக­ழக்­கூ­டும் என்று எச்சரிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நிலை­மை­யைச் சமா­ளிக்க சரி­வ­ரத் திட்­ட­மி­டு­வது அவ­சி­யம். அந்த வகை­யில் மின்­சார விநி­யோக நிறு­வ­னங்­கள் சீனா­வி­ட­மி­ருந்து பாடம் கற்­றுக்­கொள்­வது முக்­கி­யம் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.