வீட்டை வாங்கியவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் முன்னாள் உரிமையாளர்

வீட்டை வாங்கியவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் முன்னாள் உரிமையாளர்

1 mins read
a674f8ca-a909-4080-864e-17e0bc70f643
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் வீட்டை வாங்­கிய ஒரு­வர், அதன் முன்­னைய உரி­மை­யா­ள­ரால் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. வீட்­டி­லி­ருந்து வெளி­யேற மறுத்­த­தால் பழைய உரி­மை­யா­ளர் இவ்­வாறு செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இச்­சம்­ப­வம் தாய்­லாந்­தின் பத்­தும் தானி மாநி­லத்­தில் இருக்­கும் தன்­யா­புரி வட்­டா­ரத்­தில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­த­தென பேங்­காக் போஸ்ட் நாளி­தழ் குறிப்­பிட்­டது.

கொலை செய்­த­தாக நம்­பப்­படும் 66 வயது டெக்கா பாயாக்கா காவல்­து­றை­யி­டம் சர­ண­டைந்­தார்.

மாண்­ட­வர் கமோல்­பொர்ன் டொந்­தோங் எனும் 52 வயது மாது. கொலை நிகழ்ந்த பிறகு சுமார் நான்கு மணி­நே­ரத்­துக்கு சந்­தேக நப­ருக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது. அதன் பின்­னர் திரு டெக்கா சர­ண­டைந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.