மாஸ்கோ: உக்ரேனின் கடைசி போர்க்கப்பல் எனக் கருதப்படும் 'யூரிய் ஒலெஃபிரெங்கோ'வை தனது படைகள் அழித்துவிட்டதாக ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்நிகழ்வு இடம்பெற்றதாக ரஷ்யா தெரிவித்தது.
ஏவுகணைகளால் இந்தப் போர்க்கப்பல் தாக்கப்பட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஆகக் கடைசி நிலவரப்படி இதன் தொடர்பில் உக்ரேனின் கடற்படை கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக, தெற்கு ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதெனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு, லுஹான்ஸ்க் வட்டாரத்தில் உள்ள கிராமம் ஒன்றின்மீது உக்ரேன் நடத்திய தாக்கதலில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்று மாஸ்கோ நியமித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகக் கடைசி அதில் நிலவரப்படி 19 பேர் காயமடைந்தனர்.
மேலும், தொடர்ந்து மூன்றாவது வாரமாக ரஷ்ய-உக்ரேன் எல்லைக்கு அருகே இருக்கும் ரஷ்ய நகர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலில் நால்வர் காயமடைந்தனர்.
இவற்றோடு, பெல்கொரோட்டில் உக்ரேனிய தாக்குதலால் அடைக்கலம் நாடுவோருக்கான நிலையத்தில் ஒருவர் மாண்டதாகவும் இருவர் காயமுற்றதாகவும் அவ்வட்டார ஆளுநர் கூறியிருந்தார்.

