புட்டினுக்கு எதிராக கைது ஆணை: சிக்கலில் 'பிரிக்ஸ்' அமைச்சர்கள்

2 mins read
9fd8ec60-f889-49cf-accd-a8fc945be853
-

கேப்­ட­வுன்: பிரிக்ஸ் அமைப்­பின் அமைச்­சர்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற சந்­திப்­பில் மேற்­கத்­திய சக்­தி­களை முறி­ய­டிக்­கும் தங்­கள் அமைப்­பின் விருப்­பத்­துக்­குத் தங்­கள் கடப்­பாட்டை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­னர்.

தென் ஆப்­ரிக்­கா­வில் நடை­பெற்ற அந்­தச் சந்­திப்­பின்­போது, வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­றும் பிரிக்ஸ் உச்­ச­நிலை மாநாட்­டுக்கு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கலந்­து­கொண்­டால், அங்கு அவர் கைது செய்­யப்­படும் சாத்­தி­யம் குறித்­தும் பேசி­னர்.

பிரிக்ஸ் அமைப்­பில் பிரே­சில், ரஷ்யா, இந்­தியா, சீனா, தென் ஆப்­பி­ரிக்கா ஆகி­யவை அங்­கம் வகிக்­கின்­றன.

தென் ஆப்­பி­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் நலேடி பன்­டோர் பேசு­கை­யில், "ஜோக­னஸ்­பர்க்­கில் நடை­பெ­றும் பிரிக்ஸ் உச்­ச­நிலை மாநாட்­டுக்கு அனைத்­து­லக குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தால் போர்க் குற்­றம் தொடர்­பான கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள அதி­பர் புட்­டின் வந்­தால் என்ன செய்­வது," என்று கூறி­னார்.

அனைத்­து­லக குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் உறுப்­பி­ன­ரான தென் ஆப்­பி­ரிக்கா கோட்­பாட்­ட­ள­வில் திரு புட்­டினை கைது செய்ய வேண்­டி­யி­ருக்­கும்.

"இந்த விவ­கா­ரத்­தின் சட்­டத் தெரி­வு­கள் குறித்து எங்­கள் அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது. இறுதி முடிவை தென் ஆப்­பி­ரிக்க அதி­பர் சிரில் ராம­ஃபோசா எடுப்­பார். இப்­போ­தைக்கு பிரிக்ஸ் அமைப்­பின் உறுப்பு நாடு­க­ளின் தலை­வர்­க­ளுக்கு அனுப்பி விட்­டோம்," என்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

உச்­ச­நிலை மாநாட்­டுக்கு தாம் வரு­வது குறித்து ரஷ்ய அதி­பர் இது­வரை எது­வும் தெரி­விக்­க­வில்லை.

இருப்­பி­னும், ரஷ்­யா­வைப் பிர­தி­நி­தித்து உயர்­மட்ட அதி­காரி ஒரு­வர் கலந்­து­கொள்­வார் என்று அதி­பர் மாளிகை தெரி­வித்­துள்­ளது.

உக்­ரே­னில் ரஷ்யா ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கும் பகு­தி­க­ளி­லி­ருந்து சிறு­வர்­க­ளைப் பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­ய­தற்­காக அனைத்­து­லக குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் கடந்த மார்ச் மாதத்­தில் குற்­றம் சாட்­டி­யது. ஆனால், மாஸ்கோ அதை மறுத்­தது.

கேப்­ட­வுன் சந்­திப்­பின்­போது தொடக்க உரை­யாற்­றிய பிரே­சில், ரஷ்யா, இந்­தியா, தென் ஆப்­பி­ரிக்க அமைச்­சர்­களும் சீனா­வின் துணை அமைச்­ச­ரும், பன்­முனை உல­கில் தங்­கள் அமைப்­பின் தலை­மைத்­துவ பிரி­தி­ப­லிப்பு இருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

"பொரு­ளா­தார சக்­தி­யின் செறிவு பற்றி பேசிய இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர், "சில நாடு­க­ளின் வலு­வான சக்­தி­யால் பல நாடு­கள் முடங்கி கிடக்­கின்­றன.

ஐக்­கிய நாட்டு பாது­காப்பு மன்­றம் உட்­பட உல­க­ள­வில் எடுக்­கப்­படும் முடி­வில் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். புதிய சூழ்­நி­லை­க­ளுக்­குப் பழைய வழி­க­ளைக் கொண்டு தீர்வு காண முடி­யாது," என்று தெரி­வித்­தார்.