பெய்ஜிங்: சீனாவில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்கள் திருமணச் செலவைப் பற்றி நினைக்கும் முன் வருங்கால மனைவியின் குடும்பத்தாரை பரிசு மழையால் குளிர்விக்க வேண்டும். இதில் சீனாவின் ஸிஜியாங் மாநிலத்தில் உள்ள ஓர் ஆடவர் அளவுக்கு அதிகமாகவே தமது வருங்கால மனைவியின் குடும்பத்தாரை மகிழ்விக்க முயன் றுள்ளார். அவர் வருங்கால மனைவியின் குடும்பத்தாருக்கு 9.98 யுவான் ரொக்கம் (S$ 1.9மில்லியன்), தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை வருங்கால மனைவியின் இல்லத்துக்கு கவச வாகனத்தில் அனுப்பி வைத்தார். இவை யாவற்றையும் அவர் மங்களகரமான சிவப்பு நிற ஆறு இரும்புப் பெட்டிகளில் அலங்கரித்து அனுப்பியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பாக நான்கு காவலர்களையும் அவர் கூடவே அனுப்பினார். அவர் அனுப்பிய ரொக்கப் பணம் பின்னர் வங்கியில் தமது அன்பு வருங்கால மனைவியின் பெயரில் சேமித்து வைக்கவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விலைமதிப்பில்லா மணமகள் பரிசுப் பொருட்கள் சீன வழக்கத்தில் 'சாய் லி' என்று அழைக்கப்படுகிறது. இவற்றைக் கண்டவர்கள் இது குறித்து இணையத்தில் ஒரு பக்கம் பொறாமையுடனும் மறுபக்கம் விமர்சிக்கும் வகையிலும் தங்கள் பதிவுகளை போட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

