மலேசிய காவல்துறை: இவ்வாண்டு கார் திருட்டுச் சம்பவங்களில் 1,200 பேர் கைது

1 mins read
1f73c31b-5582-43a8-bfbd-4615beb57d70
-

கோலா­லம்­பூர்: இவ்­வாண்டு கார் திருட்டு சம்­ப­வங்­கள் தொடர்­பாக மொத்­தம் 1,225 பேர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­னர் என்று மலே­சிய காவல்­துறை தெரி­வித்­தது. 'லெஜாங் காஸ்' என்ற பெய­ரில் நாடு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு தொடர் சோத­னை­களில் கார் திருட்டு சந்­தேக நபர்­கள் பிடி­பட்­ட­னர்.

இந்­தச் சோத­னை­யில் 847 வாக­னங்­களைக் காவல்­துறை குற்­ற­வி­யல் புல­னாய்­வுப் பிரிவு கைப்­பற்­றி­யது. அவற்­றின் மதிப்பு 19.8 மில்­லி­யன் ரிங்­கிட்.

"நாங்­கள் 6,709 விசா­ரணை களைத் தொடங்­கி­யுள்­ளோம். ரொக்­க­மாக 502,865 ரிங்­கிட்டை பறி­மு­தல் செய்­துள்­ளோம். இது­வரை 1,658 சம்­ப­வங்­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. 639 வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டுள்­ளன," என்று நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் காவல்­துறை தெரி­வித்­தது. பொது­மக்­களும் தங்­க­ளு­டைய வாக­னங்­கள் திரு­டப்­ப­டா­மல் இருக்க பாது­காப்பு அம்­சங்­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. "கூடு­தல் பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கொண்ட வாக­னங்­களைக் கும்­பல் குறி வைப்­ப­தில்லை என்­பது எங்­க­ளு­டைய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது," என்­றது காவல்­துறை.

வாக­னங்­கள் திருட்டுப் போனால் உட­ன­டி­யாக புகார் அளிக்­கும்­ப­டி­யும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.