மோட்டார்சைக்கிள் வித்தை புரிந்த பதின்ம வயது ஆடவர் மரணம்

மோட்டார்சைக்கிள் வித்தை புரிந்த பதின்ம வயது ஆடவர் மரணம்

1 mins read
62b68608-17b3-4293-be5a-938945d32504
-

பாலிக் புலாவ்: மலே­சி­யா­வில் மோட்­டார்சைக்­கி­ளில் வித்­தை­களைப் புரிந்­து­கொண்­டி­ருந்த ஒரு பதின்ம வயது ஓட்­டு­நர் சாலை விபத்­தில் உயி­ரி­ழந்­தார்.

வித்­தை­புரிந்­து­கொண்­டி­ருந்­த வேளையில் ­சாலை சமிக்ஞை சிவப்பு நிறத்­தில் இருந்­த­போது அதைத் தாண்­டிய அவ­ரின் மோட்­டார் சைக்­கிள் ஒரு வாக­னத்­து­டன் மோதி­யது. சம்­பவ இடத்­தி­லேயே 18 வயது மோட்­டார் சைக்­கி­ளோட்டி மாண்­டார்.

இச்­சம்­ப­வம் பினாங்­கில் உள்ள துன் டாக்­டர் லிம் சோங் இயு விரை­வுச்­சா­லை­யில் நேற்று முன்தினம் காலை 4.30 மணி­யளவில் நிகழ்ந்­த­தாக பாலிக் புலாவ் நகர காவல்­துறை சூப்­ப­ரின்­டென்­டன்ட் கமா­ருல் ரிஸால் ஜெனால் தெரி­வித்­தார். விபத்­தில் முகம்­மது அக்­கிட் மாட் ரோஸி என்ற மோட்­டார் சைக்­கி­ளோட்டி சம்­பவ இடத்­தில் மாண்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

மாண்­ட­வர் பாலிக் புலாவ் நக­ரின் பெர்­மாத்­தாங் திம்­புல் பகுதி­யைச் சேர்ந்­த­வர். மோட்­டார் சைக்­கிள் மோதிய வாக­னத்­தின் ஓட்­டு­ந­ருக்கு இடது கையில் காயங்­கள் ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.