தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காப்பாற்ற எடுத்த முயற்சி கைகூடவில்லை; உயிரும் பறிபோனது

1 mins read
3f4d1eeb-4169-4f50-94ab-1a27b71c26ec
-

கோலா­லம்­பூர்: அண்­மை­யில் திரு­ம­ணம் செய்­து­கொண்ட மலே­சிய ஆட­வர், சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள சிப்­பாங் கெச்­சில் ஆற்­றில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த இரு சிறு­மி­க­ளைக் காப்­பாற்ற எடுத்த முயற்சி தோல்­வி­யில் முடிந்­தது. அந்த சிறு­மி­கள் இரு­வ­ரும் மாண்­டது மட்­டு­மல்­லாது, காப்­பாற்ற முயன்ற அந்த ஆட­வ­ரும் உயிர்­இழந்­தார்.

திரு­ம­ணம் செய்த பிறகு தமது கண­வ­ரான 29 வயது திரு முகம்­மது ஃபைசால் மஹா­சா­னு­டன் வெளி­நா­ட்டுப் பய­ணம் மேற்­கொள்ள இருந்­த­தாக அவ­ரது மனைவி திரு­வாட்டி நூர் ஃபத்­திஹா முகம்­மது கூறி­னார். பய­ணத்துக்குத் தேவையான பொருள்­களை வாங்க கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரு­வ­ரும் வெளியே சென்­ற­னர். அப்­போது ஆற்­றில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த இரு சிறு­மி­க­ளைக் காப்­பாற்ற தமது கண­வர் ஆற்­றில் குதித்­த­தாக நூர் தெரி­வித்­தார். ஒரு சிறு­மியை அவர் கரை சேர்த்­தார். இன்­னொரு சிறு­மி­யைக் காப்­பாற்ற சென்­ற­போது அவ­ரும் அச்­சி­று­மி­யும் ஆற்­றில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­னர். கரை சேர்ந்த சிறுமி உட்­பட திரு ஃபைசாலும் இன்­னொரு சிறு­மி­யும் மாண்­ட­னர். திரு ஃபைசாலின் உடல் சம்­ப­வம் நிகழ்ந்த மறு­நாள் மீட்­புப் பணி­யா­ளர்­க­ளால் மீட்­கப்­பட்­டது.