டாக்கா: மியன்மாருக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் இல்லாத ரொஹிங்கியா அகதிகள் அந்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படமாட்டார்கள் என்று பங்ளாதேஷ் உத்தரவாதம் தந்திருப்பதாக ஐநாவைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
"மியன்மாருக்குத் திரும்பிச் செல்ல விருப்பமுள்ள அகதிகள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட வேண்டும். அகதிகளைக் கட்டாயப்படுத்தி மியன்மாருக்கு அனுப்பக்கூடாது," என்று ஐநாவின் அகதிகள் பிரிவின் துணை உயர் ஆணையர் கெலி கிளெமண்ட்ஸ் கூறினார். பங்களாதேஷுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்ட அவர், இது
குறித்து அரசாங்க அதிகாரிகள், அகதிகள் ஆகியோரிடம் பேசினார். பங்ளாதேஷில் ஏறத்தாழ ஒரு மில்லியன் ரொஹிங்கியா அகதிகள் உள்ளனர்.

