டாக்கா: பங்ளாதேஷில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக இந்த வாரம் அங்கு உள்ள தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதோடு, அங்கு அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.
பத்து நாள்களுக்கு முன்பு 32 டிகிரி செல்சியசாக இருந்த அதிகபட்ச வெப்பநிலை, கிட்டத்தட்ட 41 டிகிரி செல்சியசாக உயர்ந்தது. கடும் வெப்பம் விரைவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை என்று பங்ளாதேஷ் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்னும் இரு வாரங்களுக்கு மின்தடை ஏற்படக்கூடும் என்று மின்சார, எரிசக்தி, கனிம வளத்துறை துணை அமைச்சர் நஸ்ருல் ஹமீது தெரிவித்தார்.
கடும் வெப்பம் காரணமாக மக்கள் பலரும் மருத்துவ உதவியை நாடி வருகின்றனர்.