தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இம்ரான் கானுக்கு மீண்டும் பிணை நீட்டிப்பு

1 mins read
6ef44123-be83-4fc3-959f-41373a8c25aa
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் எதிர்­கொள்­ளும் 12க்கும் அதி­க­மான வழக்­கு­க­ளுக்கு அவ­ருக்கு மீண்­டும் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தி­னம் அவ­ரின் பிணை நீட்­டிக்­கப்­பட்­டது.

அதற்கு சுமார் ஒரு மாதத்­துக்கு முன்பு திரு இம்­ரான் கான் மூன்று நாள்­க­ளுக்­குத் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தார். அதைத் தொடர்ந்து பாகிஸ்­தானில் வன்­முறை வெடித்­தது, ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதோடு, அவ­ரின் கட்­சி­யில் தலை­மைத்­து­வப் பொறுப்­பு­களில் இருந்த பலர் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொண்­ட­னர்.

வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வோர்­மீது சட்ட ரீதி­யாக கடும் நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று பாகிஸ்­தான் ராணு­வத்­தின் விளம்­ப­ரப் பிரிவு (ஐஎஸ்­பி­ஆர்) கடந்த புதன்­கி­ழ­மை­யன்று உறுதி­ய­ளித்­தி­ருந்­தது.