தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடாவில் தீவிரமடையும் காட்டுத் தீ

1 mins read
bc0166de-ce74-4f4b-9947-7fc2c7b74f79
-

மோண்ட்­ரி­யல்: கன­டா­வில் பரவி­வ­ரும் காட்­டுத் தீ தீவி­ர­ம் அடைந்­துள்­ள­தால், நாட்­டின் பல பகு­தி­களில் இருந்­தும் ஆயி­ரக்­கணக்­கா­னோர் வெளி­யேற்­றப்­பட்டுள்­ள­னர். கன­டா­வில் கட்டுக்­க­டங்­கா­மல் படர்ந்­து­வ­ரும் காட்­டுத்தீ கோடைக்­கா­லம் முழு­வதும் நீடிக்­கக்­கூ­டும் என்று மாநில அமைச்­சர் ஒரு­வர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இவ்­வாண்டு தொடக்­கத்­தி­ல் இ­ருந்து 46,000 சதுர கிலோ­மீட்­ட­ருக்­கும் அதி­க­மான நிலப்­பகுதி தீக்­கி­ரை­யா­னது.

குறிப்­பாக, கன­டா­வின் மேற்குப் பகுதி மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்­டிஷ் கொலம்­பி­யா­வில் உள்ள டம்ப்­ளர் ரிட்ஜ் நக­ரில் மக்கள்­தொகை 2,400. அந்­ந­கரை நோக்கி காட்­டுத் தீ படர்ந்­த­தால் அங்கு வசிக்­கும் பெரும்­பா­லானோர் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

கியூ­பெக் மாநி­லத்­தின் மத்திய, வட­மேற்­குப் பகு­தி­களில் நில­வ­ரம் மோச­மாக இருப்­ப­தாக கியூ­பெக் பொதுப் பாது­காப்பு அமைச்­சர் ஃபிரான்­கு­வாய் பொனார்­டெல் கூறி­னார்.

"இத்­தனை காட்­டுத் தீயை அணைப்­பதும் இத்­தனை பேரை­யை­யும் வெளி­யேற்­று­வ­தும் கியூ­பெக் வர­லாற்­றி­லேயே இதுவே முதன்­முறை. கோடைக்­கா­லம் முழு­வ­தும் போராட வேண்­டி­ இருக்­க­லாம்," என்­றார் அவர்.

கியூ­பெக்­கில் ஏறக்­கு­றைய 14,000 பேர் வெளி­யேற்ற உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வட­கி­ழக்கு அமெ­ரிக்­கா­வுக்­கும் நியூ­யார்க் நக­ருக்­கும் நேற்று முன்­தி­னம் புகை­மூட்­டம் திரும்­பி­யது.

நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் காற்­றுத்­த­ரம் மித­மான அள­வில் இருந்­தது. ஆனால், கடந்த வாரம் இருந்த அள­வுக்கு அங்கு காற்றுத்­த­ரம் மோச­மாக இல்லை.

"காட்­டுத் தீ அணைக்­கப்­படாத வரை அவற்­றால் புகை­மூட்­டம் தொட­ரும்," என்றார் தேசிய வானிலை சேவை அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த திரு டாமி­னிக்.