காட்டில் சிறுவர்கள் உயிர் பிழைக்க பழங்குடியின வளர்ப்புமுறை உதவியது

காட்டில் சிறுவர்கள் உயிர் பிழைக்க பழங்குடியின வளர்ப்புமுறை உதவியது

1 mins read
696a78a9-de19-4d86-bb41-7a5ef619bf40
-

பொகோட்டா: தென்­ன­மெ­ரிக்க நாடான கொலம்­பி­யா­வின் அமே­சான் காட்­டுப்­ப­கு­தி­யில் காணா­மல்­போய் 40 நாள்­க­ளுக்­குப் பிறகு சிறு­வர்­கள் நால்­வர் மீட்­கப்­பட்ட செய்­தியை அறிந்து நாடே மகிழ்ச்சி அடைந்­தது.

13, 9, 4 மற்றும் 1 வய­தான அந்த நான்கு உடன்­பி­றப்­பு­கள் விதை­கள், வேர்­கள், தாவ­ரங்­களைச் சாப்­பிட்டு உயிர் பிழைத்­த­தாக கொலம்­பிய தேசிய பழங்­கு­டி­யின அமைப்­பைச் சேர்ந்த திரு லூயிஸ் அகோஸ்டா தெரி­வித்­தார்.

மே 1ஆம் தேதி நிகழ்ந்த சிறிய விமான விபத்­தில் அவர்­கள் உயிர் தப்­பி­னர். ஆனால் விமானி, அவர்­களின் தாயார், மற்­றொரு பெரி­ய­வர் விபத்­தில் உயி­ரி­ழந்­த­னர்.

காட்­டுப்­ப­கு­தி­யில் வாழ அச்சிறு­வர்­க­ளுக்கு பரிச்­ச­யம் இருந்­த­தால் அவர்­கள் எப்­ப­டி­யும் உயிர் பிழைத்­து­வி­டு­வர் என்று அவர்­களின் குடும்­பத்­தி­னர் நம்­பிக்­கை­யு­டன் இருந்­த­னர்.

தேடு­தல் பணி­யில் ஈடு­பட்ட திரு அகோஸ்டா, அச்­சி­று­வர்­கள் ஆன்­மீக ரீதி­யாக பிணைக்­கப்­பட்டு இருந்­த­தாகக் கூறி­னார்.

தேடு­தல் பணி­யின்­போது 20 நாள்­க­ளாக பழங்­கு­டி­யி­ன­ரு­டன் சேர்ந்து ராணுவ வீரர்­கள் செயல்­பட்­ட­னர். அவர்­கள் கைகோத்துத் தேடி­ய­தாலேயே அச்­சி­று­வர்­கள் மீட்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.