ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான பேருந்து விபத்து; குறைந்தது 10 பேர் மரணம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாகக் காணப்படாத மோசமான பேருந்து விபத்தில் குறைந்தது 10 பேர் மாண்டனர்.

அபாயம் விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக ஓர் ஆடவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.30 மணி) சிட்னி நகருக்கு சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரேட்டா நகரில் விபத்து நிகழ்ந்தது.

பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர்.

25 பேர் காயமுற்றனர்.

ஹன்டர் வட்டாரத்தில் நடைபெற்ற திருமணத்துக்குச் சென்றிருந்த பேருந்து திரும்பி வரும்போது சாலையிலிருந்து தடம் புரண்டு கவிழ்ந்தது.

பேருந்தை ஓட்டிய 58 வயது ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓட்டுநரைப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

செவ்வாய்க்கிழமையன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் மாண்டோர், காயமடைந்தோர் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

இச்சம்பவம், ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஆக மோசமான பேருந்து விபத்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!