திருமண விருந்தினர்கள் பத்து பேர் பலி

திருமண விருந்தினர்கள் பத்து பேர் பலி

1 mins read
6aab6792-6154-47ea-a2e7-b61ca889c179
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் முப்­பது ஆண்டுகள் இல்­லாத பேருந்து விபத்­தில் திரு­மண விருந்­தி­னர்­கள் பத்து பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

சிட்­னி­யி­லி­ருந்து தென்­மேற்­கே 180 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள கிரேட்டா நக­ரத்­துக்கு அருகே ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 11.30 மணி­ய­ள­வில் விபத்து நிகழ்ந்­தது. ஹண்­டர் பகு­தி­யில் வளை­வான சாலை­யில் பேருந்து திரும்­பி­ய­போது கவிழ்ந்­தது. திரு­மண நிகழ்­வு­க­ளுக்­குப் பிர­ப­ல­மான ஹண்­ட­ரில் திரு ­மணத்தை முடித்­துக்­கொண்டு 35 விருந்­தி­னர்­கள் பேருந்­தில் திரும்பிக்­கொண்­டி­ருந்­த­போது விபத்து நிகழ்ந்­தது. இதில் 25 பேர் காயம் அடைந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் பேருந்து ஓட்­டுரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர். அவர் போதைப் பொருள் உட்­கொண்­டாரா என்ற கோணத்­தில் விசா­ரிக்­கப்பட்டு வரு­கி­றார். இதற்­கி­டையே ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஆண்­டனி அல்­ப­னிஸ், விபத்­தில் இறந்த குடும்­பத்­தி­ன­ருக்கு ஆழ்ந்த வருத்­தம் தெரி­வித்தார்.