தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

300 கிலோ எடையுள்ள இந்தோனீசிய ஆடவர் பாரந்தூக்கி மூலம் மருத்துவமனையில் சேர்ப்பு

1 mins read
5d63ba98-62fe-4f2b-8fe3-2313375a4845
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் 300 கிலோ எடை­யுள்ள ஒரு­வரை மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­ப­தற்­காக பாரந்­தூக்கி பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தலை­ந­கர் ஜகார்த்­தா­வி­லி­ருந்து 35 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள டாங்­கெ­ராங் நகர மருத்­து­வ­ம­னை­யில் ஜூன் 7ஆம் தேதி­யன்று 27 வயது முஹ­மட் ஃபஜ்ரி சேர்க்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

எட்டு மாதங்­க­ளாக படுக்­கை­யி­லேயே கிடந்­த­தால் அவ­ரது உடல் நிலை­யில் பல கோளா­று­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். முஹ­மட், 11 வய­தி­லி­ருந்து பரு­ம­னாக இருந்து வரு­கி­றார். இத­னால் தோல், கை, கால்­கள் உட்­பட பல பாகங்­களில் தொற்று ஏற்­பட்­டன. முஹ­மட்டை மருத்து­வ ­ம­னைக்­குக் கொண்டு செல்ல உள்­ளூர் அதி­கா­ரி­கள் உதவி கேட்­ட­தாக சிலெ­டக் மாவட்ட பேரி­டர் நிர்­வாக முக­வை­யின் தலைமை நிர்­வாகி முல்­யாடி கூறி­னார்.

"அங்கு வந்­த­போது சாலை குறு­க­லாக இருந்­தது. பருத்த உட­லு­டன் அவர் சாலை­யில் நடக்­க­வும் முடி­யாது. இத­னால் பாரந்­தூக்­கியை கொண்­டு­வந்­தோம்," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.