லண்டன்: இங்கிலாந்தின் நாட்டிங்ஹம் நகரில் சாலையோரம் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, ஆடவர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த மூன்று பேரையும் அவர் கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, வேனை ஓட்டிச் சென்ற மூன்று பேர் மீது மோதிக் கொலை செய்ய அந்த ஆடவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நகரின் மையப் பகுதியில் சாலையோரம் கிடந்த இரு சடலங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நகரின் மையப் பகுதிக்கு வெளியே இன்னொரு சடலம் கண்டெடுக்கப்பட்ட தாகவும் காவல்துறை தெரிவித்தது.
"மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். வேன் மோதி மூவர் காயமடைந்துள்ளனர். இதற்கெல்லாம் கைது செய்யப்பட்டவர்தான் காரணம் என்று நம்புகிறோம்.
"விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க துப்பறிவாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று பிரிட்டிஷ் காவல்துறை செய்தியாளர்களிடம் கூறியது.

