ஜப்பானிய ராணுவப் பயிற்சி முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு வீரர்கள்

1 mins read
ca3ca050-98aa-4a74-98e4-8f517867ba84
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் உள்ள ராணு­வப் பயிற்சி முகா­மில் ராணுவ வீரர் ஒரு­வர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் சக வீரர்­கள் இரு­வர் மாண்­ட­னர். ஒரு­வர் காயம் அடைந்­தார்.

துப்­பாக்­கி­யால் சுட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் பதின்­ம­வ­யது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜப்­பா­னிய ராணு­வம் கூறி­யது.

அவ­ரைச் சம்­பவ இடத்­தி­லேயே ராணுவ வீரர்­கள் மடக்­கிப் பிடித்து தடுத்து வைத்­துள்­ள­தாக ஜப்­பா­னிய காவல்­துறை தெரி­வித்­தது.

25 வயது ராணுவ வீர­ரைக் கொலை செய்ய முயன்­ற­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த ராணுவ வீர­ரைக் கொல்­லும் நோக்­கில் அந்­தப் பதின்­ம­வயது வீரர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் ஜப்­பா­னிய காவல்­துறை கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் ஜப்­பா­னின் மத்­தி­யப் பகு­தி­யில் உள்ள ஹினோ துப்­பாக்­கிச் சூடு பயிற்சி முகா­மில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

"உண்­மை­யான தோட்­டாக்­களைப் பயன்­ப­டுத்தி சுடும் பயிற்சி நடத்­தப்­பட்­டது. அப்­போது மூன்று வீரர்­க­ளைக் குறி­வைத்து தற்­காப்­புப் படை வீரர் ஒரு­வர் சுட்­டார்," என்று ஜப்­பா­னி­யத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

மாண்­ட­வர்­கள் இரு­வ­ரும் 20 வய­தி­லி­ருந்து 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்­றும் காய­ம­டைந்­த­வர்­கள் 50 வய­தி­லி­ருந்து 60 வய­துக்கு உட்­பட்­ட­வர் என்­றும் ஜப்­பா­னிய செய்தி நிறு­வ­ன­மான என்­எச்கே தெரி­வித்­தது.

துப்­பாக்­கிச் சூடு நடை­பெற்ற இடத்­துக்கு அரு­கில் உள்ள சாலை­க­ளைச் சுற்றி காவல்­துறை­யி­னர் தடுப்பு போட்­ட­னர்.

அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­தாக ஜப்­பா­னிய ஊட­கம் தெரி­வித்­தது.