கடப்பிதழைக் கொடுக்கும்படி ரோஸ்மா விண்ணப்பம்

கடப்பிதழைக் கொடுக்கும்படி ரோஸ்மா விண்ணப்பம்

1 mins read
87f84846-632a-47a7-8160-3488ac4c1765
-

கோலா­லம்­பூர்: சிங்­கப்­பூ­ரில் உள்ள தமது மக­ளை­யும் பேர­னை­யும் நேரில் சென்று பார்க்க விரும்­பு­வதாக தெரி­வித்த திரு­வாட்டி ரோஸ்மா மன்­சூர், இந்­தப் பயணத்­துக்­கா­கத் தமது கடப்­பிதழைத் தம்­மி­டம் தற்­கா­லி­க­மாக திருப்­பிக் கொடுக்­கும்­படி மலே­சிய நீதி­மன்­றத்­தி­டம் விண்­ணப்­பம் செய்­துள்­ளார்.

தமது கடப்­பி­ழைக் கேட்டு திரு­வாட்டி ரோஸ்மா விண்­ணப்­பம் செய்­தி­ருப்­பது இது மூன்­றா­வது முறை­யா­கும்.

திரு­வாட்டி ரோஸ்­மா­வின் கண­வ­ரான முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக், ஊழல் குற்­றம் புரிந்­த­தாக நிரூ­பிக்­கப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு 12 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சூரி­ய­சக்தி தகடு தொடர்­பான ஊழல் வழக்­கில் திரு­வாட்டி ரோஸ்மா குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளித்த நீதி­மன்­றம், அவ­ருக்குப் பத்து ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் 970 மில்­லி­யன் ரிங்­கிட் அப­ரா­த­மும் விதித்­தது.

தீர்ப்பை எதிர்த்து திரு­வாட்டி ரோஸ்மா மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளார். அந்த வழக்கு விசா­ரணை ஜூலை 11லிருந்து 14ஆம் தேதி வரை நடை­பெற இருக்­கிறது.

தண்­டனை விதிக்­கப்­பட்ட பிறகு 2021ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 15ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்ள திரு­வாட்டி ரோஸ்­மா­வுக்கு முதல்­மு­றை­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அப்­போது அவ­ரது மக­ளுக்கு பிர­சவ காலம்.

சிங்­கப்­பூ­ருக்கு வர கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி­யன்று அவ­ருக்கு மீண்­டும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து, மார்ச் 23ஆம் தேதி முதல் கடந்த மாதம் 5ஆம் தேதி வரை திரு­வாட்டி ரோஸ்மா சிங்­கப்­பூ­ரில் இருந்­தார்.

தமது மகளும் பேர­னும் உடல்­ந­ல­மின்றி இருந்­த­தாக அவர் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.