ஒடேசா மீது தாக்குதல்; குறைந்தது மூவர் மரணம்

ஒடேசா மீது தாக்குதல்; குறைந்தது மூவர் மரணம்

1 mins read
68aa826e-232c-406e-96cd-3e3bbb5ef44e
-

ஒடேசா: உக்­ரே­னுக்­குச் சொந்­த­மான கருங்­க­டல் துறை­முக நக­ர­மான ஒடேசா மீது ரஷ்­யப் படை­கள் மிகக் கடு­மை­யான தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளன.

இதில் குறைந்­தது மூன்று பேர் மாண்­ட­தாக உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­தது.

ஏறத்­தாழ 13 பேர் காய­ம் அடைந்த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஒடேசா நக­ரைக் குறி­வைத்து ரஷ்­யப் படை­கள் தாக்­கு­தல் நடத்­து­வது மிக­வும் அரிது.

இந்நிலையில், உக்ரேனின் டொனெட்ஸ்க் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக மூன்று பேர் மாண்டனர்.

இதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே, ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்க உக்ரேன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமியர் புட்டின் நேற்று முன்தினம் கூறினார். ஆனால் ரஷ்யாவிடம் இழந்த சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.