'ஜான்சன் தெரிந்தே தவறு செய்தார்'

'ஜான்சன் தெரிந்தே தவறு செய்தார்'

2 mins read
3907f44b-a93e-4f38-843b-ec5952e7d047
-

லண்­டன்: கொவிட்-19 நெருக்­கடி ­நி­லை­யின்­போது பிரிட்­ட­னில் பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டி­ருந்­தும் அப்­போது அந்­நாட்­டின் பிர­த­ம­ராக இருந்த போரிஸ் ஜான்­ச­னின் அலு­வ­ல­கத்­தில் பல ஒன்­று­கூ­டல்­கள் நடை­பெற்­றன.

இது­கு­றித்து கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது திரு ஜான்­சன், நாடாளு­மன்­றத்­தில் பொய் சொன்­ன­தாக விசா­ர­ணைக் குழு தெரி­வித்­துள்­ளது.

பொய் சொல்­லித் திசை திருப்­பி­யது மட்­டு­மன்றி, தமக்கு எதி­ராக யாரும் கருத்து தெரி­விக்­கக்­கூ­டாது என்ற நோக்­கு­டன் சிலரை அவர் மிரட்­டி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

விசா­ர­ணைக் குழு­வின் இந்த அறிக்கை வெளி­வ­ரு­வ­தற்கு முன்பே, திரு ஜான்­சன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லிருந்து வில­கி­னார்.

அவர் தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தால் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கும்.

அவர் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று பிரிட்­டிஷ் அர­சி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

விசா­ர­ணைக் குழு வெளி­யிட்­டுள்ள 100 பக்­கங்­க­ளைக் கொண்ட அறிக்கை, திரு ஜான்­ச­னுக்­குப் பெரும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், விசா­ர­ணைக் குழு முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­களை திரு ஜான்­சன் மறுத்­துள்­ளார். தாம் தவறு ஏதும் செய்­ய­வில்லை என்று அவர் அடித்­துக்­கூ­று­கி­றார்.

மாறாக, விசா­ர­ணைக் குழு சொல்­வ­து­தான் பொய் என்று அவர் தெரி­வித்­தார்.

அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக தமக்கு எதி­ராக இத்­த­கைய குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

விசா­ர­ணைக் குழு வெளி­யிட்ட இந்த அறிக்­கை­யின் கார­ண­மாக ஏற்­கெ­னவே பிள­வு­பட்டு இருக்­கும் கன்­சர்­வேட்­டிவ் கட்­சி­யின் நிலை மேலும் மோசம் அடை­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

திரு ஜான்­ச­னுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளால் பிரிட்­டிஷ் பிர­த­மர் ரிஷி சுனக்­கிற்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ளது.

நேர்மை, நிபு­ணத்­து­வம், வெளிப்­ப­டைத்­தன்­மை­மிக்க அர­சாங்­கத்தை நிலை­நாட்ட அவர் உறுதி அளித்­தி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தற்­போது அவ­ருக்­குப் பின்­ன­டைவு ஏற்­பட்டுள்­ளது.