'சட்டவிரோத கும்பல்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகள்'

'சட்டவிரோத கும்பல்களைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகள்'

1 mins read
97748efd-9e8f-46a0-9934-4b77fa6479be
-

கோலா­லம்­பூர்: சட்­ட­வி­ரோத இணைய சூதாட்­டக் கும்­பல்­களைக் குறிப்­பிட்ட சில மலே­சிய அர­சி­யல்­வா­தி­கள் பாது­காப்­ப­தால் இப்­பி­ரச்­சி­னை­யைக் களை­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளதாக மலே­சிய உள்­துறை அமைச்­சர் சைஃபுதீன் நசுட்­டி­யோன் இஸ்­மா­யில் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளார். இதுவே மலே­சிய உள்­துறை அமைச்சு, அர­சாங்­கம், காவல்­துறை எதிர்­கொள்­ளும் மிகப் பெரிய சவால் என்று அவர் கூறி­னார்.

"சட்­ட­வி­ரோத இணைய சூதாட்­டம் கார­ண­மாக சமூக, பொரு­ளி­யல் அள­வில் நாட்­டிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்­ப­டு­கிறது. இப்­படி இருக்­கும்­போது பணத்­துக்­காக எப்­படி அர­சி­யல்­வா­தி­களால் இத்­த­கைய கும்­பல்­க­ளைப் பாது­காக்க முடி­கிறது?" என்று அமைச்­சர் சைஃபுதீன் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­னார்.

இந்­தப் பிரச்­சி­னைக்­குச் சட்ட ரீதி­யாக தீர்வு காண வேண்­டும் என்­றும் சட்­டத் திருத்­தங்­க­ளைக் கொண்டு வர வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

"சூதாட்­டம் தொடர்­பான சட்­டம் 1953ஆம் ஆண்­டில் இயற்­றப்­பட்­டது. அதன் பிறகு அதில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை. யார் இதை மாற்ற வேண்­டும்? நாடா­ளு­மன்­ற­மும் அர­சி­யல்­வா­தி­க­ளும்­தான் அதை மாற்ற வேண்­டும்.

"இது­கு­றித்து 2019ஆம் ஆண்­டில் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் தேவை­யான நட­வ­டிக்­கை­களை இன்­னும் எடுக்­க­வில்லை. சூதாட்­டம் தொடர்­பான சட்­டம் நிதி அமைச்­சின் மேற்­பார்­வை­யின்­கீழ் வரு­வ­தால் இது­கு­றித்து பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மு­டன் கலந்­து­ரை­யாட இருக்­கி­றேன்," என்று அமைச்­சர் சைஃபுதீன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.