உக்ரேனில் அமைதி முயற்சிக்கு வந்த தென்னாப்பிரிக்க அதிபர் குழு; கியவ் மீது குண்டு போட்ட ரஷ்யா

உக்ரேனில் அமைதி முயற்சிக்கு வந்த தென்னாப்பிரிக்க அதிபர் குழு; கியவ் மீது குண்டு போட்ட ரஷ்யா

1 mins read
bb275806-52a3-4ecb-b2ba-3baf32d220e0
-

கியவ்: ஆப்­பி­ரிக்க உயர்மட்ட குழு ஒன்று, அமைதி முயற்­சி­களில் ஈடுபடுவதற்காக உக்­ரேன் சென்றுள்ளது.

இந்த நிலையில் உக்­ரேன் தலை­ந­கர் மீது ரஷ்யா குண்டு களை வீசி தாக்­கி­யது.

உக்­ரே­னுக்­கும் ரஷ்­யா­வுக்­கும் இடையே அமைதி பேச்சு நடத்த முடி­யும் என்ற நம்­பிக்­கையோடு தென்­னாப்­பி­ரிக்­க அதிபர் சிரில் ராமா­போசா தலை­மை­யில் குழு புறப்பட்டது.

இந்­தக் குழு­வில் சென­கல், ஸாம்­பியா, கோமோ­ரோஸ், எகிப்து உட்­பட ஏழு நாடு­க­ளின் தலை­வர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

உக்­ரேன் அதி­பர் ஸெலென்ஸ்­கி­யு­டன் பேசிய பிறகு இன்று அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னு­டன் பேச்சு நடத்­த­வி­ருக்­கி­றோம் என்று அமைதி குழு தெரி­வித்தது.

இந்த நிலை­யில் குறைந்­தது இரண்டு வெடி­குண்­டு­கள் தலை­ந­கர் கியவ்வை உலுக்­கி­யுள்­ளன.

மத்­திய கியவ்­வில் இரண்டு வெடிப்பு சத்­தம் கேட்­ட­தாக அங்­குள்ள ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தின் செய்­தி­யா­ளர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே செயின்ட் பீட்­டர்ஸ்­பர்க் அனைத்­து­லக பொரு­ளி­யல் மாநாட்­டில் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புடின் முக்­கிய உரை ஆற்­று­வார் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.