மூன்று பள்ளி பேருந்துகள் மோதி 80 பேர் காயம்

மூன்று பள்ளி பேருந்துகள் மோதி 80 பேர் காயம்

1 mins read
9eb9e7c0-1b01-436f-8a18-20ef44bd9759
-

சோல்: தென் கொரி­யா­வின் தலை­ந­கர் சோலின் கிழக்கே உள்ள நெடுஞ்­சா­லை­யில் மூன்று பள்ளிப் பேருந்­து­கள் மோதி விபத்­துக்­குள்­ளாயின.

இதில் மாண­வர்­கள் உட்­பட 80க்கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­துள்­ள­னர்.

பள்ளிப் பேருந்­து­களில் 75 பள்ளி மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் சிலர் சென்­று கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது ஹாங்­சி­யோன் மாகா­ணத்­தில் விபத்து நடந்­த­தாக கங்­வான் மாநில தீய­ணைப்பு நிலை­யத்­தின் அதி­காரி தெரி­வித்­தார். இது குறித்து தக­வல் அறிந்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த மீட்புப் படை­யி­னர், விபத்­தில் சிக்­கிய மாண­வர்­கள் மற்­றும் ஆசி­ரி­யர்­களை மீட்­ட­னர்.

இந்த சம்­ப­வத்­தில் பலத்த காயங்­க­ளு­டன் இரண்டு மாண­வர்­கள் உட்­பட மூன்று பேர் காப் பாற்­றப்­பட்­ட­னர்.

இவர்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. விபத்­துக்­கான கார­ணம் தெரி­ய­வில்லை.

பேருந்து ஓட்­டு­நர்­க­ளின் கவ­னக்­கு­றைவு கார­ண­மாக இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

காவல்­து­றை­யி­னர் விபத்­துக்­கான கார­ணத்தை அறிய தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.