21 ஆண்டுகளுக்குப் பிறகு
மீண்டும் இணைந்த தம்பதி
கோலாலம்பூர்: மலேசியாவில் மணவிலக்குப் பெற்ற ஒரு ஜோடி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. செல்வி ஹவாஸலினாவும், 46,
திரு முஹமட் எஸ்வானி அஹமட் நஸேரியும், 45, திரு மணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு 2022ஆம் ஆண்டில் அவர்கள் மணவிலக்குப் பெற்றனர். இந்த நிலையில் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.
மணவிலக்குப் பெற்ற பிறகு இருவருக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால் ஹவாஸலினாவின் தாயார் மறைந்தபோது ஃபேஸ்புக்கில் இரங்கல் செய்தியை முஹமட் எஸ்வானி பதிவிட்டிருந்தார். நண்பர் மூலமாக தனது முன்னாள் மனைவியின் தாயார் மறைந்த செய்தியை அவர் அறிந்திருந்தார். இதையடுத்து மீண்டும் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
"பல ஆண்டுகள் ஆனதால் ஆரம்பத்தில் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. முகமெல்லாம் மாறிவிட்டது. ஃபேஸ்புக் நண்பர்களாக இருக்கலாம் என்று அவர் கூறினார். அதிலிருந்து நாங்கள் இருவரும் தொடர்ந்து எங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி பேசினோம். பின்னர் நாம் இருவரும் ஒன்று சேரலாம் என்று அவர் கூறினார். நான் அதை ஏற்றுக்கொண்டேன்," என்று ஹவாஸலினா கூறினார்.
இரண்டு பள்ளிகளுக்கு
பிரதமர் அன்வார் வாழ்த்து
உலகின் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் இடம்பிடித்த இரண்டு பள்ளிகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து பள்ளிகளின் பட்டியலில் செகோலா கெபாங்சான் செரி பெர்மாய் பள்ளி புத்தாக்கப் பிரிவிலும் சுகாதாரமான வாழ்க்கை முறை பிரிவில் சிலாங்கூரின் பியுஎஸ்கே கான்சோங் டராட் பள்ளியும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சாதனைக்காக கல்வியாளர்களிடமும் பிள்ளைகளிடமும் தலைவணங்குகிறேன். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை சாதிக்க வாழ்த்துகிறேன் என்று அன்வார் தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சிறந்த ஐந்து பள்ளிகளுக்கான பரிசு போட்டியை 'டி4 எஜுகேஷன்' என்ற அமைப்பு கடந்த ஆண்டில் தொடங்கியது. மாணவர் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி சமூகத்திற்குப் பங்காற்றிய பள்ளிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
மொத்தம் $250,000 அமெரிக்க டாலர் பரிசுப் பணம் ஐந்து வெற்றியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புத்தாக்கம், சவால்களை சமாளித்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

