ஏழு ஆண்டுகள் கழித்து யேமன் தலைநகரிலிருந்து சவூதி சென்ற பயணிகள் விமானம்

சனா (யேமன்): ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக பயணிகள் விமானம் ஒன்று யேமன் தலைநகர் சனாவிலிருந்து சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

அந்த யேமனியா ஏர்வேஸ் விமானத்தில் இருந்தவர்கள் ஹஜ்ஜுப் புனிதப் பயணம் சென்றவர்கள் ஆவர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு புறப்பட்ட விமானத்தில் 277 பயணிகள் இருந்தனர்.

சனா நகரம் கிளர்ச்சியாளர்களின் வசம் இருந்து வந்துள்ளது.

சவூதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும் ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

அதனால் 2016ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் தலைமையிலான படைகள் சனா அனைத்துலக விமான நிலையத்தை முற்றுகையிட நேரிட்டது.

இப்போது அங்கிருந்து பயணிகள் விமானம் மீண்டும் இயங்கியிருப்பது பதற்ற நிலை தணிந்து வருவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!