தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கப்பலில் தீ: 132 பேர் மீட்பு

1 mins read
88b39e7e-f763-4e69-97c7-7cd1c43c13fa
-

செபு சிட்டி: பிலிப்­பீன்­ஸில் உல்­லா­சக் கப்­பல் ஒன்று நேற்று அதி­காலை தீப்­பி­டித்து எரிந்­தது. சரி­யான நேரத்­தில் தீ எரி­வது கண்­ட­றி­யப்­பட்­ட­தால் கப்­ப­லில் இருந்த அனை­வ­ரும் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது அந்­தக் கப்­ப­லில் பய­ணி­களும் கப்­பல் ஊழி­யர்­க­ளு­மாக 132 பேர் இருந்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர்.

'எம்வி எஸ்­பெ­ரன்ஸா ஸ்டார்' என்­னும் பெய­ரு­டைய அந்­தக் கப்­பல் பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு பிலிப்­பீன்­சின் சிகி­ஜோர் மாநி­லத்­தில் உள்ள இலி­கான் சிட்டி பகு­தி­யி­லி­ருந்து லாஸி என்­னும் இடம் நோக்கி சனிக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ள­வில் புறப்­பட்­டுச் சென்­றது.

தாக்­பி­ல­ரான் சிட்டி துறை­மு­கம் அருகே கப்­பல் சென்­று­கொண்டு இருந்­த­போது நேற்று அதி­காலை 3.55 மணி­ய­ள­வில் அதன் இயந்­திர அறை­யில் தீப்­பி­டித்­தது.

அப்­போது குழந்­தை­கள் உட்­பட 72 பய­ணி­களும் 60 ஊழி­யர்­களும் கப்­ப­லில் இருந்­த­னர். தீப்­பி­டித்து எரிந்­த­தும் அவர்­களில் சிலர் கட­லில் குதித்து நீந்தி துறை­மு­கத்தை அடைந்­த­னர்.

எஞ்­சிய அனை­வ­ரும் மீன­வர்­கள், மற்­றொரு கப்­ப­லின் ஊழி யர்­கள் மற்­றும் கட­லோ­ரக் காவல் படை­யி­ன­ரால் மீட்­கப்­பட்­ட­தாக போஹோல் மாகாண பேரி­டர் அபாய மீட்­புத் துறை அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் அந்­தோணி டாமே­லெ­ரியோ கூறி­னார்.

திடீ­ரென தீப்­பி­டித்­தது குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.