டனாங்: மத்திய வியட்னாமில் உள்ள டனாங்கை அமெரிக்கப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ரோனல்ட் ரேகன் நேற்று சென்றடைந்தது. சில வாரங்களுக்கு முன்பு சீனக் கப்பல்கள் தனது கடற்பகுதிக்குள் நுழைந்தது குறித்து வியட்னாம் அதிருப்திக் குரல் எழுப்பியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையிலான முழுமையான பங்காளித்துவத்தின் பத்தாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் இப்போர்க் கப்பல் வியட்னாமுக்குச் சென்றுள்ளது.

