கட்டடம் விழுந்ததில் குறைந்தது நால்வர் காயம்

கெய்ரோ: எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரில் 14 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர்.

மேலும் சிலரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அலெக்சாண்டிரியாவின் மத்திய குடியிருப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது. அண்மை ஆண்டுகளாக எகிப்தில் தொடர்ந்து பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அந்நாட்டில் கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெறாததை இது காட்டுவதாகக் கூறுப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் அங்கு தங்கிக்கொண்டிருந்தவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அலெக்சாண்டிரியாவில் உள்ள பல கட்டடங்கள், விடுமுறைகளின்போது உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ளும் எகிப்தியர்களால் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு எகிப்தியர்கள் பலர் அந்நகரத்துக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கட்டடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!