தென்கொரியாவில் கைக்குழந்தையைக் கொன்றால் இனி மரண தண்டனை

சோல்: தென்கொரியா புதிய மசோதா ஒன்றை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.

கைக்குழந்தைகளைக் கைவிடுவது, கொலை செய்வது போன்ற கொடுமைகள் இனிமேல் மிகக் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.

கைக்குழந்தைகளைக் கொலை செய்யும் பெற்றோருக்கு மரண தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வகை செய்கிறது.

தென்கொரியாவில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் கைக்குழந்தை கொடுமைகள் தொடர்பான பிரிவுகள் முதன்முதலாக நடைமுறைக்கு வந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவற்றில் திருத்தம் இடம்பெற்று இருக்கிறது.

தென்கொரியாவில் இதுவரை கைக்குழந்தையை கைவிடுகின்ற அல்லது கைவிடுவதால் அந்தக் குழந்தைக்கு மரணம் ஏற்படுகின்ற சம்பவம் நிகழ்ந்தால் அத்தகைய குற்றங்களுக்குக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தண்டனை குறைக்கப்படுவதுண்டு.

ஆனால், இனிமேல் இத்தகைய குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

இனிமேல் கைக்குழந்தையைக் கைவிட்டால் மூன்றாண்டு வரை சிறை அல்லது ஐந்து மில்லியன் வோன் (S$5,230) அபராதம் விதிக்க முடியும்.

இந்தத் தண்டனை இரண்டாண்டு வரைப்பட்ட சிறை அல்லது 3 மில்லியன் வோனாக இதுவரை இருந்தது.

கைக்குழந்தையைக் கொலை செய்தால் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட கிடைக்கலாம்.

இதுவரை அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத்தண்டனையாக இருந்த இந்தத் தண்டனை அகற்றப்பட்டு கடுமையான தண்டனை நடப்புக்கு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!