டாஷ்கண்ட்: மூன்று நாள்களாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த உஸ்பெகிஸ்தான் அஞ்சலக ஊழியர் மரணமடைந்துள்ளார்.
32 வயது குமாரி ஒல்கா லியொண்டியெவா ஜூலை 24ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் தலைநகர் டாஷ்கண்டின் ஒன்பது மாடி கட்டடத்தில் அஞ்சல் விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கட்டடத்தின் முதல் தளத்தில் மின்தூக்கியில் நுழையும் காட்சி உள்கட்டமைப்பு கண்காணிப்புக் கருவியில் பதிவாகியுள்ளது.
அதற்குப்பின் அவர் காணப்படவில்லை.
அவர் காணவில்லை என அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார் கொடுக்க, சீரிய தேடுதலுக்குப் பின் ஜூலை 27ஆம் தேதி அவரது சடலம் மின்தூக்கியில் கண்டெடுக்கப்பட்டது.
ஆறு வயது மகளை விட்டுச் சென்றுள்ளார் ஒல்கா. தற்போது உறவினர்கள் அந்தக் குழந்தையைக் கவனித்து வருகின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதே மின்தூக்கி செயலிழந்துபோனதற்குக் காரணம் என்று முதற்கட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.