அர்ஜெண்டினாவில் தாக்குதலுக்குப் பலியான 11 வயது பெண்

புவெனஸ் அய்ரஸ்: அர்ஜெண்டினாவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு மாணவி தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

இச்சம்பவம் புதன்கிழமையன்று லானுஸ் நகரில் நிகழ்ந்தது. பெண்ணின் பையைப் பறிப்பதற்காக கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கியிருக்கின்றனர்.

மொரேனா டொமிங்கெஸ் எனும் அப்பெண் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரைத் தாக்கி பையைத் திருடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறினர். அர்ஜெண்டினாவில் கொள்ளையர்கள் பலர் இவ்வாறுதான் திருடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மொரேனா பின்னர் மருத்துவமனையில் மாண்டார்.

சம்பவத்தைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. நாட்டில் வன்முறைச் செயல்கள் அதிகரிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அர்ஜெண்டினாவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு நடக்கவிருந்த பிரசார நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று அர்ஜெண்டினாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மோசமடையும் பணவீக்கம், பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றின் தொடர்பில் வாக்காளர்கள் அதிகம் கவலை கொண்டுள்ள நிலையில் தேர்தல் நடக்கவிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!