சிறையில் உள்ள செய்தியாளரை விடுவிக்க ஆஸ்திரேலியப் பிரதமர் சீனாவிடம் வலியுறுத்து

சிட்னி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய செய்தியாளர் செங் லெய்யை சீனா விடுவிக்குமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக சிறைவாசம் இருக்கும் செங்கின் நலன் குறித்து தாம் கவலை கொள்வதாக திரு ஆல்பனிஸ் சனிக்கிழமை குறிப்பிட்டார்.

சிறையில் இருந்தவாறு ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் பேசிய செங், மரங்களையும் சூரிய வெளிச்சத்தையும் அவற்றைவிட முக்கியமாக தம் பிள்ளைகளைக் காண மனம் ஏங்குவதாகக் கூறியுள்ளார்.

செங் சொன்ன இச்செய்தியை அவரின் துணைவியார் நிக் கோய்ல், ஆஸ்திரேலிய செய்தித் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வியாழக்கிழமை பகிர்ந்தார்.

சீன அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான சிஜிடிஎன்னின் முன்னாள் தொகுப்பாளரான செங், 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால், 2021 பிப்ரவரியில்தான் அவர் முறையாக கைது செய்யப்பட்டார்.

அரசாங்க ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அது குறித்து மேல்விவரங்கள் வழங்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!