வெலிங்டன்: கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதன் உள்கட்டமைப்பு சீர்குலைந்தது.
சில வீடுகள் மிகக் கடுமையாகச் சேதமடைந்தன.
இந்நிலையில், ஆக்லாந்தை மறுசீரமைக்க குறைந்தது 877 மில்லியன் நியூசிலாந்து டாலர் ($524 மில்லியன்) நிதி ஒதுக்கப்படும் என்று நியூசிலாந்து அரசாங்கம் வியாழக்கிழமையன்று அறிவித்தது.
1.6 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆக்லாந்தைக் கடந்த ஜனவரி மாதம் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் உலுக்கின.
அதில் நான்கு பேர் மாண்டனர்.
சாலைகளும் வீடுகளும் சேதமடைந்தன.


